தேவனைத் துதிக்கும் பாடல் 
12
1 அப்போது நீ கூறுவாய், 
“கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன் 
நீர் என் மீது கோபமாக இருந்தீர். 
ஆனால் இப்போது கோபமாக இருக்க வேண்டாம்! 
என் மீது உமது அன்பைக் காட்டும்”. 
2 என்னைத் தேவன் காப்பாற்றுகிறார். 
நான் அவரை நம்புகிறேன். நான் அஞ்சவில்லை. 
அவர் என்னைக் காப்பாற்றுகிறார். 
கர்த்தராகிய யேகோவா எனது பெலம். 
அவர் என்னைக் காப்பாற்றுகிறார். 
நான் அவரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுகிறேன். 
3 உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள். 
பிறகு நீ மகிழ்ச்சியாய் இருப்பாய். 
4 பிறகு நீ கூறுவாய்: 
“கர்த்தரைத் துதியுங்கள்! அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள் 
அவர் செய்தவற்றை அனைத்து ஜனங்களிடமும் கூறுங்கள்!” 
5 கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்! 
ஏனென்றால், அவர் பெரிய செயல்களைச் செய்துள்ளார். 
உலகம் முழுவதும் தேவனுடைய செயல்களைக் குறித்த செய்தியைப் பரப்புங்கள். 
எல்லா ஜனங்களும் இதனை அறியும்படி செய்யுங்கள். 
6 சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப் பற்றிச் சத்தமிடுங்கள்! 
இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்! 
