133
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று 
1 சகோதரர்கள் ஒருமித்து உட்கார்ந்து உண்மையாகவே ஒன்றுபடுவது 
மிகவும் நல்லதும் இன்பமுமானது. 
2 அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு, 
கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும் 
வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது. 
3 எர்மோன் மலையிலிருந்து சீயோன் மலையில் வீழும் மென்மையான மழையைப்போன்றுமிருக்கும். 
ஏனெனில் சீயோனில் இருந்துதான் நித்திய வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தை கர்த்தர் தந்தருளினார். 
