150
1 கர்த்தரைத் துதியுங்கள்! 
தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்! 
பரலோகத்தில் அவரது வல்லமையைத் துதியுங்கள்! 
2 அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்! 
அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்! 
3 எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்! 
வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்! 
4 தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்! 
நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்! 
5 ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்! 
பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்! 
6 எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்! 
கர்த்தரைத் துதிப்போம்! 
