43
1 தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான். 
அவன் வஞ்சகன், பொய்யன். 
தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும். 
அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும். 
2 தேவனே, நீர் என் பாதுகாப்பிடம். 
ஏன் என்னைக் கைவிட்டீர்? 
பகைவரிடமிருந்து தப்பும் வழியை நீர் ஏன் எனக்குக் காட்டவில்லை? 
3 தேவனே, உமது ஒளியும் உண்மையும் என் மேல் பிகாசிப்பதாக. 
உமது பரிசுத்த மலைக்கு அவை வழிகாட்டும். 
உமது வீட்டிற்கு அவை என்னை வழிநடத்தும். 
4 நான் தேவனுடைய பலிபீடத்திற்கு வருவேன். 
என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிற தேவனிடம் நான் வருவேன். 
தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் வாழ்த்துவேன். 
5 ஏன் நான் துக்கமாயிருக்க வேண்டும்? 
ஏன் நான் கலக்கம் கொள்ளவேண்டும்? 
நான் தேவனுடைய உதவிக்காகக் காத்திருப்பேன். 
அவரைத் துதிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கும். 
அவர் என்னை மீட்பார். 
