47
கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல் 
1 சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள், 
தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள். 
2 உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர். 
பூமியெங்கும் அவர் பேரரசர். 
3 பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார். 
அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார். 
4 தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந்தெடுத்தார். 
தான் நேசித்த யாக்கோபிற்காக அந்த அதிசய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார். 
5 எக்காளமும் கொம்பும் முழங்க, 
கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார். 
6 தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள். 
நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள். 
7 அகில உலகத்திற்கும் தேவனே அரசர். 
துதிப் பாடல்களைப் பாடுங்கள். 
8 பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார். 
எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார். 
9 ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத் 
தேசங்களின் தலைவர்கள் சந்திப்பார்கள். 
எல்லாத் தேசங்களின் எல்லாத் தலைவர்களும் தேவனுக்குரியவர்கள். 
தேவனே எல்லோரிலும் மேன்மையானவர். 
