53
மகலாத் என்னும் கருவியை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு மஸ்கீல் என்னும் பாடல். 
1 தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான். 
அத்தகைய மனிதர்கள் கெட்டவர்களாகவும் தீயவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருக்கிறார்கள். 
அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதில்லை. 
2 தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று 
பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். 
3 ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள். 
ஒவ்வொரு மனிதனும் தீயவன். 
நன்மையான காரியத்தைச் செய்பவன் 
ஒருவன் கூட இல்லை. 
4 தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்! 
ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப் பதில்லை. 
தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார். 
5 ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள். 
அத்தீயோர் இஸ்ரவேலரின் பகைவர்கள். 
அத்தீயோரைக் தேவன் தள்ளிவிட்டார். 
எனவே தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள். 
அத்தீயோரின் எலும்புகளை தேவன் சிதறடிப்பார். 
6 சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக. 
தேவன், அவர்கள் வெற்றிபெற உதவுவார். 
அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது ஜனங்களை மீட்கும்போது யாக்கோபு களிகூருவான். 
இஸ்ரவேல் மிகுந்த மகிழ்ச்சிகொள்வான். 
