75
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று 
1 தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். 
நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். 
நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள். 
2 தேவன் கூறுகிறார்: 
“நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன். 
நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன். 
3 பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும். 
ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்”. 
4-5 “சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். 
ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’ 
‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார். 
6 ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை 
எதுவும் இப்பூமியில் இல்லை. 
7 தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார். 
தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார். 
தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார். 
8 தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார். 
கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது. 
அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார், 
கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள். 
9 நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன். 
இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன். 
10 கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன். 
நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன். 
