100
நன்றி கூறும் பாடல் 
1 பூமியே, கர்த்தரைப் பாடு. 
2 கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்! 
மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்! 
3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள். 
அவரே நம்மை உண்டாக்கினார். 
நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள். 
4 நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள். 
துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள். 
அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள். 
5 கர்த்தர் நல்லவர். 
அவர் அன்பு என்றென்றும் உள்ளது. 
என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும். 
