99
1 கர்த்தர் அரசர். 
எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும். 
கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் அரசராக வீற்றிருக்கிறார். 
எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும். 
2 சீயோனில் கர்த்தர் மேன்மையானவர். 
ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர். 
3 எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும். 
தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது. 
தேவன் பரிசுத்தர். 
4 வல்லமையுள்ள அரசர் நீதியை நேசிக்கிறார். 
தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர். 
யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர். 
5 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். 
அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள். 
6 மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர். 
அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன். 
அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது 
அவர் அவர்களுக்குப் பதில் தந்தார். 
7 உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார். 
அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். 
தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார். 
8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர். 
ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும், 
மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர். 
9 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். 
அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள். 
நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர். 
