98
ஒரு துதிப்பாடல் 
1 புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால் 
கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள். 
அவரது பரிசுத்த வலது கை 
மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும். 
2 கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார். 
கர்த்தர் அவர்களுக்குத் தமது நன்மையைக் காட்டினார். 
3 இஸ்ரவேலரிடம் தேவன் காட்டிய உண்மையை அவரைப் பின்பற்றுவோர் நினைவு கூர்ந்தனர். 
தூர தேசத்து ஜனங்கள் நம் தேவனுடைய மீட்பின் வல்லமையைக் கண்டனர். 
4 பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள். 
துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள். 
5 சுரமண்டலங்களே, கர்த்தரைத் துதியுங்கள். 
சுரமண்டலங்களின் இசையே, அவரைத் துதியுங்கள். 
6 எக்காளங்களையும் மற்றும் கொம்புகளையும் ஊதுங்கள். 
எங்கள் அரசராகிய கர்த்தரைக் களிப்போடு ஆர்ப்பரியுங்கள். 
7 கடலும், பூமியும் 
அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும். 
8 ஆறுகளே, கைகளைத் தட்டுங்கள். 
எல்லா மலைகளும் இணைந்து பாடுங்கள்! 
9 கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள். 
அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார். 
அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார். 
