121
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் 
1 நான் மலைகளுக்கு நேராகப் பார்க்கிறேன். 
ஆனால் எனக்கு உதவி உண்மையாகவே எங்கிருந்து வரப்போகிறது? 
2 எனக்கு உதவி பரலோகத்தையும் பூமியையும் 
படைத்த கர்த்தரிடமிருந்து வரும். 
3 தேவன் உன்னை விழவிடமாட்டார். 
உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார். 
4 இஸ்ரவேலின் பாதுகாவலர் தூங்குவதில்லை. 
தேவன் ஒருபோதும் உறங்கார். 
5 கர்த்தர் உன் பாதுகாவலர். 
அவரது மிகுந்த வல்லமையால் உன்னைப் பாதுகாக்கிறார். 
6 பகல் வேளையில் சூரியன் உன்னைத் துன்புறுத்தாது. 
இரவில் சந்திரன் உன்னைத் துன்புறுத்தாது. 
7 எல்லா ஆபத்துக்களிலிருந்தும் கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார். 
கர்த்தர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார். 
8 நீ வரும்போதும் போகும்போதும் கர்த்தர் உனக்கு உதவுவார். 
இப்போதும் என்றென்றும் கர்த்தர் உனக்கு உதவுவார். 
