122
ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல் 
1 ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது 
நான் மிகவும் மகிழ்ந்தேன். 
2 இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம். 
3 இது புதிய எருசலேம். 
ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. 
4 இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு. 
கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள். 
அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும். 
5 அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள். 
தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள். 
6 எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள். 
“உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன். 
7 உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன். 
உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.” 
8 என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக, 
இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன். 
9 நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக, 
இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன். 
