14
தாவீது இராகத் தலைவனுக்கு அளித்த பாடல் 
1 “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான். 
கொடிய, சீர்கெட்ட காரியங்களை மூடர்கள் செய்வார்கள். 
அவர்களுள் ஒருவனும் நல்லதைச் செய்வதில்லை. 
2 கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார். 
ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார். 
(ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.) 
3 ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள். 
எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை. 
4 தீயோர் என் ஜனங்களை அழித்தனர். 
அத்தீயோர் தேவனை அறியார்கள். 
தீயோருக்கு மிகுதியாய் உணவு உண்டு. 
கர்த்தரை அவர்கள் ஆராதிப்பதில்லை. 
5-6 ஏழையின் அறிவுரையை அத்தீயோர் கேளார்கள். 
ஏனெனில் ஏழை தேவனை நம்பி வாழ்வான். 
தேவன் நல்லவர்களோடு இருப்பார். 
எனவே தீயோர் மிகவும் அச்சம் கொள்வார்கள். 
7 சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும். 
கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்! 
கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர். 
ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார். 
அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும். 
