15
தாவீதின் பாடல் 
1 கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்? 
உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்? 
2 தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும், 
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும். 
3 அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான். 
அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான். 
அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான். 
4 தேவனை வெறுப்போரை அவன் மதியான். 
ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான். 
அவன் அயலானுக்கு வாக்களித்தால் 
அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான். 
5 அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான். 
குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான். 
அந்த நல்ல மனிதனைப்போல வாழும் ஒருவன் எப்போதும் நீங்காது தேவனுடைய அருகே இருப்பான். 
