146
1 கர்த்தரை துதி! 
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! 
2 என் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன். 
என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன். 
3 உதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள். 
ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது. 
4 ஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள். 
அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும். 
5 ஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். 
அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள். 
6 கர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார். 
கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார். 
கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார். 
7 ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார். 
தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார். 
சிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களைக் கர்த்தர் விடுவிக்கிறார். 
8 குருடர் மீண்டும் காண்பதற்குக் கர்த்தர் உதவுகிறார். 
தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்குக் கர்த்தர் உதவுகிறார். 
கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார். 
9 நம் நாட்டிலுள்ள அந்நியர்களைக் கர்த்தர் காப்பாற்றுகிறார். 
விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார். 
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார். 
10 கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்! 
சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்! 
கர்த்தரைத் துதியுங்கள்! 
