70
ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. 
1 தேவனே, என்னை மீட்டருளும்! 
தேவனே விரைந்து எனக்கு உதவும்! 
2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். 
அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்! 
3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். 
அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன். 
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். 
உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன். 
5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன். 
தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! 
தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். 
மிகவும் தாமதியாதேயும்! 
